Tamilnadu
கம்பத்தில் கட்டி வைத்து நாயை அடித்து துன்புறுத்திய நபர்... சிறையில் அடைத்த போலிஸ் : நடந்தது என்ன?
கோவை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது வளர்ப்பு நாயைத் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினார்.
இதுதொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விலங்குகள் நல சங்க நிர்வாகி மினிவாசுதேவன், மாரிமுத்து வீட்டிற்குச் சென்று இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
அதற்கு மாரிமுத்து, அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து மினிவாசுதேவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மாரிமுத்துவிடம் இருந்து நாயை மீட்டு விலங்குகள் நல சங்கத்தினர் தங்களின் காப்பகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!