Tamilnadu
“என்னைப்போல 3 பெண்கள்” : கணவரின் 4வது திருமணத்தால் அதிர்ச்சி - கலெக்டரிடம் மனைவி அளித்த பகீர் புகார்!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவருக்குக் கடந்த 2012ம் ஆண்டு சந்தியா என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஆண், பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரம் திருப்பூரில் தங்கி வேலை செய்வதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது சிங்காரம், தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இதேபோன்று இரண்டு பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.
இது பற்றி அறிந்த சந்தியா அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத்தட்டிக் கேட்டபோது :"நான் அப்படிதான் இருப்பேன். உனக்கு பிடிக்வில்லை என்றால் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள். என்னைக் கைது செய்தாலும் நான் ஆறு மாதத்தில் வெளியே வந்துவிடுவேன்" என சிங்காரம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சந்தியா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!