Tamilnadu
“ரூ.10 லட்சம் கொடு.. இல்ல திருமணத்தை நிறுத்திவிடுவேன்” : பெண்ணை போனில் மிரட்டியவருக்கு நேர்ந்த கதி!
சென்னை அடுத்த மண்ணடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரூ.10 லட்சம் கொடுக்காவிட்டால், நடத்தை சரியில்லை என மாப்பிள்ளை வீட்டில் சொல்லி திருமணத்தைத் தடுத்து நிறுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பிறகு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணுக்கு வந்த தொலை பேசி எண் குறித்து விசாரணை நடத்தினர்.
அருகில் உள்ள தொலைபேசி பூத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. அங்கு சென்ற போலிஸார் தொலைபேசி பூத்தில் இருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் பாரிமுனை, பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசாமி என்பவர்தான் மிரட்டல் விடுத்த நபர் என தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் பாலசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இப்படிச் செய்ததாக பாலசாமி போலிஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Also Read
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!