Tamilnadu
“சிறுமியை திருமணம் செய்த இளைஞர் - அடைக்கலம் கொடுத்த நண்பர் போக்சோவில் கைது” : தேனியில் காவல்துறை அதிரடி!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள T. மேட்டுப்பட்டி பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதம் 9ஆம் தேதி காணவில்லை எனக் கூறி அந்த சிறுமியின் தந்தை, தேவாரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இதனை அடுத்து தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 17 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறுமி தேவாரம் அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 17 வயது சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேவாரம் அருகே உள்ள சிறுமியின் ஊரான T.மேட்டுப்பட்டி பகுதியைச் சார்ந்த கூலித் தொழில் செய்து வரும் முருகன் (32) , என்பவர் சிறுமியை கூட்டி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முருகன் கூட்டிச் சென்று அவரது நண்பரது வீட்டில் ஒரு மாத காலமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தேவாரம் காவல்துறையினர் முருகனிடம் இருந்து சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவரது நண்பரான கேசவன் என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முருகன் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!” : தமிழர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
6 நாட்களில் 1,500 டன் கழிவுகள்... தமிழ்நாடு முழுவதும் SIPCOT தொழிற்பூங்காக்களிலில் மாபெரும் தூய்மைப் பணி!
-
கோலகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... முதல் 3 பரிசுகளை வென்றது யார்? என்ன? - விவரம் உள்ளே!
-
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!