Tamilnadu
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி.. காப்பாற்ற முயன்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்: தி.மலையில் நடந்த சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வரசு. நேற்று இரவு இவரது பகுதியில் பலத்த மழை பெய்ததால் இவரது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறு கீழே விழுந்தது.
அப்போது, இவரது வீட்டிலிருந்த பசுமாடு உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மாட்டின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிலிருந்து செல்வரசு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பசுமாட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வரசு மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பசு மாடுவும், செல்வரசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் செல்வரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மின்சாரம் தாக்கி பசு மாடும், வாலிபரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!