Tamilnadu
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி.. காப்பாற்ற முயன்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்: தி.மலையில் நடந்த சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வரசு. நேற்று இரவு இவரது பகுதியில் பலத்த மழை பெய்ததால் இவரது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறு கீழே விழுந்தது.
அப்போது, இவரது வீட்டிலிருந்த பசுமாடு உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மாட்டின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிலிருந்து செல்வரசு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பசுமாட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வரசு மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பசு மாடுவும், செல்வரசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் செல்வரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மின்சாரம் தாக்கி பசு மாடும், வாலிபரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!