Tamilnadu
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி.. காப்பாற்ற முயன்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்: தி.மலையில் நடந்த சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வரசு. நேற்று இரவு இவரது பகுதியில் பலத்த மழை பெய்ததால் இவரது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறு கீழே விழுந்தது.
அப்போது, இவரது வீட்டிலிருந்த பசுமாடு உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மாட்டின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிலிருந்து செல்வரசு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பசுமாட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வரசு மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பசு மாடுவும், செல்வரசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் செல்வரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மின்சாரம் தாக்கி பசு மாடும், வாலிபரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!