Tamilnadu
நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி இளைஞர் பலி..திருப்பூரில் சோகம்!
திருப்பூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் ஆதித்யா ராம். இவர் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரது நண்பன் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நேற்று திண்டுக்கல் சென்றுள்ளார்.
பின்னர் நண்பனைச் சந்தித்து ஆதித்யா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்றொரு நண்பன் செல்வகுமாருடன் இணைந்து தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் ஆதித்யா குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக நண்பவர் அவரை மீட்டக முயற்சி செய்தார். ஆனால் அவர்களால் ஆதித்யாவை மீட்க முடியாமல் போனது. பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் இரண்டு மணி நேரம் போராடி ஆதியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் ஆதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வந்த கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!