Tamilnadu
“இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்” : போக்சோவில் கைது செய்த காவல்துறை!
சென்னை கொருக்குப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் போலி ஐடி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் போலிஸார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு வீட்டிலிருந்து படித்து வருகிறார். இந்நிலையில் ,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் DPயில் வைத்துள்ளார்.
இதனையடுத்து மர்மநபர் ஒருவர் இரவு 10 மணிக்கு சேட் செய்ய தயாரா இரு என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அந்த குறுஞ்செய்தி முகவரி கிரேசி குயின் கீர்த்தி என்ற பெயரில் இருந்தது.
இதுகுறித்து பள்ளி மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கலைச்செல்வன் என தெரியவந்தது. இவர் போலி ஐடி மூலம் இன்ஸ்டாகிராமில் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து தவறான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன் படுத்தியதாகவும் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கலைச்செல்வனை. போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!