Tamilnadu

குடும்பத் தகராறு... அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தாமணி. இந்த தம்பதிக்கு ரவீந்திரன், சூர்யா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இளையமகன் சூர்யாவிற்குப் பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்துள்ளனர். இதையடுத்து மூத்தமகனுக்குத் திருமணத்திற்காக வரன் தேடிவந்துள்ளனர். இது தொடர்பாகக் கடந்த 21ம்தேதி மூத்தமகனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த முருகேசன், சாந்தாமணி இருவரும் கீழ்குப்பம் சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோர்களின் இறுதி நிகழ்ச்சிகளை மகன்கள் செய்துமுடித்துள்ளனர். மேலும் மூத்த மகன் ரவீந்திரன் பெற்றோர்கள் இறப்பிற்கு தான்தான் காரணம் என நினைத்து யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பெற்றோர்களின் சமாதியில் பூச்சு மருந்து குடித்து ரவீந்திரனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு