Tamilnadu

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம்.. ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : நடந்தது என்ன?

சென்னை அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யபாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று இரவு கணவன் வீட்டில் இருக்கும் தனது அறைக்குச் திவ்யபாரதி சென்றுள்ளார்.

பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் உறவினர்கள் சென்று கதவைத் தட்டிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் கதவைத் திறக்காததால் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்துக் கெண்டு உள்ளே சென்று பார்த்தபோது திவ்யபாரதி புடவையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலிஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் விஸ்வநாதனுக்கு 33 வயது என்பதால் 23 வயதான திவ்யபாரதிக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என கூறி விவாகரத்து கேட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவன் விஸ்வநாதனிடமும், பெற்றோரிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “பள்ளி மாணவியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்” : போக்சோவில் கைது செய்து போலிஸார் விசாரணை!