Tamilnadu
’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அவரது கணவர் முனியப்பன். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ஆவடி ரயில் நிலையம் அருகே முனியப்பன் ரயில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
கணவர் இறந்த செய்தி அறிந்த நாள் முதல் ஐஸ்வர்யா மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்துள்ளார். கணவர் இறந்த பிறகு இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள ஐஸ்வர்யா, இன்று அவரது வீடு அருகே உள்ள பச்சையம்மன் கோயில் கிணற்றில் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஐஸ்வர்யா கணவர் தன்னை அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் காணப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறியதோடு உறவினர்களிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!