Tamilnadu
“தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
சென்னை கீரிம்ஸ் சாலை அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 20 வயதாகும் சதீஷ்குமார் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அம்மாவோடு வசித்து வந்த சதீஷ்குமார் தான் குடும்பத்தைக் கவணித்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அம்மாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், சதீஷ்குமாரின் தயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானர். தனது தாயின் மீது அளவுக்கடந்த பாசத்தில் இருந்த சதீஷ்குமார் அம்மா இறந்ததில் இருந்து கடும் மன உலைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் கூவம் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால், கூவம் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற சதீஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?