Tamilnadu
“தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
சென்னை கீரிம்ஸ் சாலை அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 20 வயதாகும் சதீஷ்குமார் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அம்மாவோடு வசித்து வந்த சதீஷ்குமார் தான் குடும்பத்தைக் கவணித்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அம்மாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், சதீஷ்குமாரின் தயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானர். தனது தாயின் மீது அளவுக்கடந்த பாசத்தில் இருந்த சதீஷ்குமார் அம்மா இறந்ததில் இருந்து கடும் மன உலைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் கூவம் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால், கூவம் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற சதீஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!