Tamilnadu
“தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
சென்னை கீரிம்ஸ் சாலை அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 20 வயதாகும் சதீஷ்குமார் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அம்மாவோடு வசித்து வந்த சதீஷ்குமார் தான் குடும்பத்தைக் கவணித்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அம்மாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், சதீஷ்குமாரின் தயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானர். தனது தாயின் மீது அளவுக்கடந்த பாசத்தில் இருந்த சதீஷ்குமார் அம்மா இறந்ததில் இருந்து கடும் மன உலைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் கூவம் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால், கூவம் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற சதீஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!