Tamilnadu
“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?
வேலூர்மாவட்டம், சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ். டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி தினேஷின் மனைவி ஜீவிதா. கணவன் தினேஷ் தினமும் மதுபோதையில் வந்து ஜீவிதாவையும் குழந்தைகளையும் தாக்குவதாகவும் இதனால் தினசரி குடும்பத்தில் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவிதா 7 வயது பெண் குழந்தை அட்சயாவையும், ஐந்து வயது ஆண் குழந்தை நந்தகுமாரையும், ஆறு மாத கைக் குழந்தை குழந்தையையும் பெற்றதாயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தகவலறிந்து வந்த தெற்குகாவல் துறையினர் வழக்குபதிவு செய்து, 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எடி.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரணை மேற்கொண்டார். கணவரின் மது போதையால் இந்த குடும்பத்தில் உள்ள 4 பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சலவன்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!