Tamilnadu
“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஊத்தங்கரை போலிஸ்” : குவியும் பாராட்டு !
உறவுகள் கைவிட்டதால் சாலையோரம், பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை போலிஸார்.
ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவலர்கள் ஆதரவற்று இருக்கும் மன நிலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேரை மீட்ட போலிஸார் அவர்களை முடித்திருத்தம் செய்து, குளிக்கவைத்து, புது ஆடைகளை அணியவைத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களை விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
ஊத்தங்கரை போலிஸாரின் இந்த செயலைப் பொதுமக்கள் விழுந்து பாராட்டி வருகிறார்கள். உறவுகள் கைவிட்டபோதும் போலிஸார் நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கான மறு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!