Tamilnadu
ஆடு திருட கூகுள் மேப் பயன்படுத்தும் நவீன கொள்ளை கும்பல்... தர்ம அடிகொடுத்த பொதுமக்கள்: நடந்தது என்ன?
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவர் மாவட்டங்களில் சில மாதங்களாக தொடர்ந்து வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் திருடுபோவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்து வந்தன. இந்த புகார்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆடுகளை திருடிச் சென்றபோது பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டனர். அப்போது அவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிஸில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு, ராமநாதன் என தெரியவந்தது. மேலும் அவர்களை எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கடை போடும் ஒருவர்தான் என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆடுகளை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களும் ஆடு கடை போடுபவர் சொன்னதால் திருட வந்ததாக கூறியுன்னர்.
மேலும் ஆடுகளை திருடிவிட்டு விரைந்து கிராமத்தை விட்டு செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்துவாகவும் இந்த கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யார் எந்த ஆடு கடை போடுபவர் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!