Tamilnadu
காதலிக்க மறுத்ததால் சிறுமியின் பல்லை உடைத்து இளைஞன் வெறிச்செயல் - சென்னையில் பரபரப்பு!
சென்னை அமைந்தகரை பகுதிக்குட்பட்ட புல்லா அவென்யூ பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கோடம்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது ஒரு வருடமாக ஆகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தனது பாட்டி இறந்த நிலையில் தாய் தந்தையுடன் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து தங்கியபோது கடந்த 5ம் தேதி முதல் சிறுமியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 10ம் தேதி இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்த ஆகாஷ் (20) சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னிடம் பேச வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுக்க, கையால் தாக்கி சிறுமியின் பல்லை உடைத்துள்ளார். இது சம்பந்தமாக மருத்துவமனையில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம் போலிஸார், ஆகாஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பேச வற்புறுத்தியது, பொது இடத்தில் வைத்து தாக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை போலிஸார் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!