Tamilnadu
மனைவி சுட்ட தோசை கருகியிருந்ததால் கணவர் தற்கொலை... 4 முறை தற்கொலைக்கு முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்!
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மாதவி. பழனி குடிபோதைக்கு அடிமையானதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பழனி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாதவி அவர் சாப்பிடுவதற்குத் தோசை சுட்டுக்கொடுத்துள்ளார். அதில் ஒரு தோசை கருகியிருந்துள்ளது.
இதனால் மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமாகத் தனது அறைக்குச் சென்று பழனி கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியபோது பழனி ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது முறையாக தற்கொலைக்கு முயன்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!