Tamilnadu
“டேங்கர் லாரியில் இருந்து 20,000 லிட்டர் பெட்ரோல்-டீசல் திருட்டு”: சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!
சென்னை, எண்ணூரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டேங்கர் லாரிகளில் அனுப்பப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாதவரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் டேங்கர் லாரிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், எண்ணூர் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து டேங்கர் லாரி ஒன்று டி.நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது
அப்போது, அந்த லாரி அருகில் எடைமேடை பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் லாரியின் ஓட்டுநர் மற்ற இருவருடன் சேர்ந்து லாரியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிக்கொண்டிருந்தனர்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் உடனே அவர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பின்னர் ஓட்டுநர் ரவி, மணி, வினோத் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் 10,000 லிட்டர் டீசல், 10,000 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read
- 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!