Tamilnadu
காசு தரலனா புகார் கொடுப்பியா? போதையில் டீக்கடையை துவம்சம் செய்த அடாவடி பேர்வழி - CCTVயால் சிக்கிய இளைஞர்!
கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் சென்னையை அடுத்த நாவலூரில் 3 ஆண்டுகளாக ஜூஸ் மற்றும் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக ரியாஸின் கடைக்கு அருகே தினேஷ் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது ரியாஸ் கடையில் டீக்குடித்து விட்டு கணக்கில் வைத்துக்கொள்ளும்படி கூறி காசு கொடுக்காமல் இருந்திருக்கிறார் தினேஷ்.
இப்படி இருக்கையில் குடித்த டீக்கு காசு கேட்ட ரியாஸிடம் மிரட்டும் தொணியில் விக்னேஷ் பேசியிருக்கிறார். இதனால் கட்டட உரிமையாளரிடம் தினேஷின் செயல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து உரிமையாளர் அழைத்து பேசியதால் ஆத்திரமடைந்த தினேஷ், என்னை பற்றி புகாரா கூறுகிறாய் என்று நேற்றிரவு மது போதையில் ரியாஸின் டீக்கடையை சேதப்படுத்தி அங்கிருந்த பொருட்களை உடைத்து கலாட்டா செய்திருக்கிறார். மேலும், ரியாஸையும் தாக்கியிருக்கிறார் தினேஷ்.
பின்னர் கேளம்பாக்கம் போலிஸாரிடம் ரியாஸ் புகாரளித்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே விக்னேஷ் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!