Tamilnadu
“ஆரணியைத் தொடர்ந்து திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டவர் திடீர் பலி” : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூர் சென்றுள்ளார். பின்னர், வேலை முடித்து விட்டு திருவண்ணாமலை செல்வதற்காக திருக்கோவிலூர் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அப்போது, கையில் வாங்கி வந்திருந்த பரோட்டாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த பயணிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் தாமோதரனைச் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் பரோட்டா சாப்பிடும் போது மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகத் தரமற்ற உணவு உண்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தற்போது பரோட்டா சாப்பிட்ட மற்றொருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உணவகங்களில் தரமில்லாத உணவுகள் சமைக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!
-
திருநர்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா… இந்திய அளவில் கடும் எதிர்ப்பு… பின்வாங்குமா ஒன்றிய பாஜக அரசு!
-
”டெல்லியின் கண்ணசைவிற்கு ஆடும் பழனிசாமி.. இவர் தான் மக்களைக் காப்பாரா?”: அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்!
-
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!