Tamilnadu
தேதி அச்சிடாமல் குளிர்பானம் தயாரிப்பு.. 3,000 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் - சோதனையில் பகீர் சம்பவம்!
திருச்சி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியை அச்சிடாமல் குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த குளிர் பானங்களை சோதனை செய்தபோது அதில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை அச்சிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை அச்சிடப்படாமல் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் லிட்டர் குளிர் பானங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குளிர் பானத்தின் மாதிரியை சென்னை கிண்டியில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சோதனை முடிந்தபிறகு முழுமையான தகவல் தெரியவரும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேதி குறிப்பிடாமல் குளிர்பானம் தயாரிக்ககூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!