Tamilnadu
“கெட்டுப் போன கிரில் சிக்கன் கொடுத்து ஏமாத்துறியா?.. ஆத்திரத்தில் கடை உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்!
சென்னை, தி.நகரைச் சேர்ந்த அஸ்மத் அலி என்பவர், தி.நகர், ராமேஸ்வரம் சாலை, நமஸ்கிருஸ்தம் பிளாட் என்ற இடத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த 8ம் தேதி ஜெகன் என்பவர் கிரில் சிக்கன் வாங்கி சென்றுள்ளார்.
பின்னர், அவர் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்து, கெட்டுப்போன சிக்கன் கொடுத்ததாகக் கூறி, கடையிலிருந்து உரிமையாளரின் மகன் முகமது அர்ஷத் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு கடைக்கு வந்த ஜெகனின் நண்பர்கள் சிலர் அர்ஷத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற கடையில் வேலை பார்த்தவர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
பின்னர் ரத்தக் காயமடைந்த முகமது அர்ஷத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு நடந்த சம்பவம் குறித்து R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்த ஜெகனை கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!