Tamilnadu
குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு சுற்றிய நாய்.. நரபலி கொடுத்து கொலையா? : மதுரை போலிஸ் தீவிர விசாரணை!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் தலையை நாய் கவ்வியபடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார், நாயிடமிருந்து குழந்தையின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாய் கவ்வி வந்த குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதேபோல், சாக்கடை கழிவு நீரின் அழுக்குப் படிந்திருந்தது. இதனால் யாராவது குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்து சாக்கடையில் வீசி இருப்பார்களோ என்ற சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பது குறித்து அப்பகுதி முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மதுரை முழுவதும் அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!