Tamilnadu
குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு சுற்றிய நாய்.. நரபலி கொடுத்து கொலையா? : மதுரை போலிஸ் தீவிர விசாரணை!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் தலையை நாய் கவ்வியபடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார், நாயிடமிருந்து குழந்தையின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாய் கவ்வி வந்த குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதேபோல், சாக்கடை கழிவு நீரின் அழுக்குப் படிந்திருந்தது. இதனால் யாராவது குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்து சாக்கடையில் வீசி இருப்பார்களோ என்ற சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பது குறித்து அப்பகுதி முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மதுரை முழுவதும் அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!