Tamilnadu
குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு சுற்றிய நாய்.. நரபலி கொடுத்து கொலையா? : மதுரை போலிஸ் தீவிர விசாரணை!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் தலையை நாய் கவ்வியபடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார், நாயிடமிருந்து குழந்தையின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாய் கவ்வி வந்த குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதேபோல், சாக்கடை கழிவு நீரின் அழுக்குப் படிந்திருந்தது. இதனால் யாராவது குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்து சாக்கடையில் வீசி இருப்பார்களோ என்ற சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பது குறித்து அப்பகுதி முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மதுரை முழுவதும் அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!