Tamilnadu
இது தமிழினத்தின் ஆட்சி.. தமிழ் மொழிக்கு தி.மு.க அரசு ஆற்றிய சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத் தான் இருந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்ப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத் தான் இருந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியது தி.மு.க அரசுதான். நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது தி.மு.க அரசுதான்.
'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியதும் தி.மு.க அரசுதான்.
ஶ்ரீ,ஶ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு,திருமதி சொல்லை சட்டபூர்வம் ஆக்கியது, தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் - கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!
திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது. தமிழ் வாழ்க என எழுத வைத்தது. சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது.
தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது. ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது.
தமிழை கணினி மொழி ஆக்கியது. தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது.
ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது.
உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது. உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்ததும் அத்தகைய தமிழ் அரசை நடத்தியது தான் தி.மு.க அரசு.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!