Tamilnadu

நண்பனை அடித்துக் கொன்று கடலில் வீசிய வாலிபர்... போலிஸிடம் சந்தேகம் கிளப்பிய பெற்றோர்.. நடந்தது என்ன?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். பட்டதாரி இளைஞரான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலிஸார் புகார் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று ஒதுங்கியதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலிஸார் விசாரணை செய்தபோது காணாமல் போன மகேஷ்வரன்தான் இவர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மகேஷ்வரன் நண்பர் கார்த்திக் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, மகேஷ்வரனை அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலிஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்கு அவரது உடலைக் கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை போலிஸார் கைது செய்தனர்.

இருந்தபோதும், மகேஷ்வரனின் பெற்றோர் தனது மகன் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணி உள்ளிட்ட சிலரை போலிஸார் தேடிவருகின்றனர்.

Also Read: “ரியல் எஸ்டேட்டில் முதலீடு செஞ்சா பணம் குவியும்” ரூ.2 கோடி மோசடி செய்த கும்பல்-போலிஸில் சிக்கியது எப்படி?