Tamilnadu
"இவரால் காவல்துறைக்கே களங்கம்": வியாபாரியிடம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் வழக்கில் நீதிபதி கண்டனம்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த வியாபாரியிடம் ரூபாய் 10 லட்சம் பணத்தைப் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியை போலிஸார் கைது செய்தனர்.
இதற்கு முன்னதாகவே வசந்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது விசாரித்த நீதிபதிகள் உடனே அவரை கைது செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த வசந்தியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் ஜாமின் மனுவை நீதிபதி பி.புகழேந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, வியாபாரியிடம் பணம் பறித்த வசந்தியால் காவல்துறைக்கே களங்கம். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும்.
காவலர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள் காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் விசாரணையை பாதிக்கும் என்பதால் வழக்கின் விவரத்தை தர இயலாது என்று கூறிய நீதிபதி, முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!