Tamilnadu
ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலின் போது விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக , தி.மு.க நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவரும் ,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 9 மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.
காலையில் திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!