Tamilnadu
ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலின் போது விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக , தி.மு.க நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவரும் ,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 9 மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.
காலையில் திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!