Tamilnadu
முறைகேடுகளுக்குப் பெயர்போன அ.தி.மு.க : சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தமிழ்நாட்டில் தொழிலகக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூபாய் 7 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.
இதேபோன்று, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐந்து தொழிலகக் கூட்டுறவு வங்கிகளில் இதேபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 45 வங்கிக் கிளைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
அதேபோல் இன்றைய விவாதத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அ.தி.மு.க ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூபாய் 516 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த முறைகேடுகள் சேலம், நாமக்கல்லில் மட்டுமே நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, "அ.தி.மு.க ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.3.28 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது" என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
Also Read
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!
-
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை... - முழு விவரம் !