Tamilnadu
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. +2 மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது : ‘பகீர்’ தகவல்!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளியில் வேலை இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், மாணவி அதிக நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெற்றோர்கள் கொடுத்த ஒரு தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணை செய்தபோது மாணவி சேலத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேலம் சென்ற போலிஸார் மாணவியை மீட்டனர். அப்போது, மாணவியுடன் இருந்த வாலிபரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பதிக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இது குறித்து மாணவி திருப்பதியிடம் கூறியுள்ளார். இதனால் திருப்பதி என்னுடன் நீ வந்துவிடு, உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என கூறி அவரை சேலம் அழைத்துச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!