Tamilnadu
பெண் போலிஸைக் கொலை செய்த கணவர்.. விருதுநகரில் நடந்த பயங்கரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விக்னேஷ். அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை பணிமனையில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பானுப்ரியா (30). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (20-8-21) இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்து பானுப்பிரியாவின் கழுத்தை பெல்ட்டால் நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது. அதில் பானுப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விருதுநகர் சூலக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து பானுப்ரியாவின் கணவர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!