Tamilnadu
பெண் போலிஸைக் கொலை செய்த கணவர்.. விருதுநகரில் நடந்த பயங்கரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விக்னேஷ். அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை பணிமனையில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பானுப்ரியா (30). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (20-8-21) இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்து பானுப்பிரியாவின் கழுத்தை பெல்ட்டால் நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது. அதில் பானுப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விருதுநகர் சூலக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து பானுப்ரியாவின் கணவர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!