Tamilnadu
“கேமிராவுக்கு ஆர்டர் செய்தால்... பார்சலில் வந்தது என்ன தெரியுமா?'' : ஆடி ஆஃபரில் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத். இவர் புதுவண்ணாரப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300D கேமிரா 26,500ஆடர் செய்துள்ளார்.
கோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் இ.எம்.ஐ தவனை முறையில் கேமிரா வாங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியர் வினோத்திடம் பார்சலை கொடுத்துள்ளார்.
இதில், சந்தேகம் அடைந்த வினோத் பார்சலை பிரித்து பார்த்தபோது கேனான் கேமிரா சீல் இடப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பெயிண்ட் டப்பா மற்றும் பழைய கேமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வினோத்தின் புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இதுபோல் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!