Tamilnadu
"செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு தயார்" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. மேலும் 14 மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருசில தினங்களில் வெளியிடப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்துச் செல்வது, வேலைக்கு அனுப்புவது குறித்துத் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளிலிருந்து 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
Also Read
-
நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!