Tamilnadu
நாளை வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் PTR : அதில் இடம் பெறுவன யாவை?
தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை (ஆகஸ்ட் 9) 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதில் என்ன எதிர்பாக்கலாம் என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
* வெள்ளை அறிக்கை என்பது அரசின் நிதி நிலையையும், எதிர்கால திட்டங்களையும் மக்களுக்கு முன்னால் வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒரு அறிக்கையாகும்.
* அரசாங்கம் மட்டுமல்லாமல், நிறுவனம், அமைப்பு, கூட்டமைப்பு ஆகியவை ஒரு பிரச்சனையை சரி செய்ய எடுத்திருக்கும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வெள்ளை அறிக்கை பயன்படுகிறது.
* 9ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வெள்ளை அறிக்கையில், 2011ம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக கடன் சுமையில் தமிழகம் இருந்துள்ளது. எனவே, இது தொடர்பான விரிவான விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறக் கூடும்.
* ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்ச கோடி கடனுக்காக, ஆண்டுக்கு அரசு சுமார் 50,000 கோடி ரூபாயைக் வட்டியாகக் கட்டிவரும் நிலையில், கடன் சுமை அதிகரிப்பதன் காரணம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
* அதிமுக அரசு கடன்களை எதற்கு வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், அதன் பயன்பாட்டு விவரங்கள் என்ன என்பதை இந்த வெள்ளை அறிக்கை நிச்சயமாக விளக்கும்
* கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை, அரசு செய்துள்ள செலவுகள் என்ன, கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளதா என்பது பற்றியும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும்.
* தமிழக அரசின் நிதிநிலை தவிர பிற துறைகளான போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் நிதி நிலை பற்றிய அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
* கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பெற்ற கடன், செலவு,வருவாய் இழப்பு ,நிதி சுமை அனைத்தும் வரும் 9 தேதி வெளியிடவுள்ள வெள்ளை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வர உள்ளது.
Also Read
-
”ஆட்டம் காணும் பிரதமர் மோடி” : அதானி, அம்பானி குறித்த பேச்சுக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!
-
அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
“பாஜக அரசின் பாரபட்சத்துக்கு இடையே மகத்தான சாதனை படைக்கும் திமுக ஆட்சி” - செல்வப்பெருந்தகை புகழாரம் !
-
வாக்குப்பதிவு இயந்திரங்களை கையில் எடுத்துச் சென்ற அதிகாரிகள் - பாஜக ஆளும் உ.பி-யில் ஷாக் !
-
ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு : அங்கு நடப்பது என்ன?