Tamilnadu
தண்ணீர் நிறுத்தம்; பணியாளர்கள் வெளியேற்றம்.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததன் பேரில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த மூன்றுமாத அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது மருத்து தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!