Tamilnadu
தண்ணீர் நிறுத்தம்; பணியாளர்கள் வெளியேற்றம்.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததன் பேரில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த மூன்றுமாத அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது மருத்து தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!
-
அரசுப் பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிவறைகள் வரை.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!