Tamilnadu
தேர்வு அறையிலிருந்து வெளியேற்றம்... மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு: காஞ்சிபுரம் அருகே சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே உள்ளது சவீதா மருத்துவக் கல்லூரி. இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனாலி என்ற மாணிவி முதலாம் ஆண்டு படிந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரியில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது மாணவி சோனாலி மொபைல் போன் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு அறையிலிருந்த ஆசிரியர் சோனாலியை தேர்வு எழுத விடாமல் அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால், மனமுடைந்த சோனாலி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் கல்லூரிக்குச் சென்று சோனாலியின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,சோனாலியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!