Tamilnadu
தேர்வு அறையிலிருந்து வெளியேற்றம்... மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு: காஞ்சிபுரம் அருகே சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே உள்ளது சவீதா மருத்துவக் கல்லூரி. இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனாலி என்ற மாணிவி முதலாம் ஆண்டு படிந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரியில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது மாணவி சோனாலி மொபைல் போன் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு அறையிலிருந்த ஆசிரியர் சோனாலியை தேர்வு எழுத விடாமல் அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால், மனமுடைந்த சோனாலி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் கல்லூரிக்குச் சென்று சோனாலியின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,சோனாலியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!