Tamilnadu
தேர்வு அறையிலிருந்து வெளியேற்றம்... மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு: காஞ்சிபுரம் அருகே சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே உள்ளது சவீதா மருத்துவக் கல்லூரி. இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனாலி என்ற மாணிவி முதலாம் ஆண்டு படிந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரியில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது மாணவி சோனாலி மொபைல் போன் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு அறையிலிருந்த ஆசிரியர் சோனாலியை தேர்வு எழுத விடாமல் அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால், மனமுடைந்த சோனாலி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் கல்லூரிக்குச் சென்று சோனாலியின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,சோனாலியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!