Tamilnadu
“கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
தேனி மாவட்ட அலுவலக கூடரங்கில், மாநிலத்தில் முதன் முறையாக கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை வகித்தார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகபட்சம் ரூ.11,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தேனி மாவட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர்.
பாக்கியுள்ள விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் கூட்டுறவுத்துறை மூலம் மஞ்சள் கொள் முதல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை கொள்முதல் செய்வதற்கு ஆலோசிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!