Tamilnadu
“கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
தேனி மாவட்ட அலுவலக கூடரங்கில், மாநிலத்தில் முதன் முறையாக கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை வகித்தார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகபட்சம் ரூ.11,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தேனி மாவட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர்.
பாக்கியுள்ள விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் கூட்டுறவுத்துறை மூலம் மஞ்சள் கொள் முதல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை கொள்முதல் செய்வதற்கு ஆலோசிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!