Tamilnadu
“கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
தேனி மாவட்ட அலுவலக கூடரங்கில், மாநிலத்தில் முதன் முறையாக கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை வகித்தார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகபட்சம் ரூ.11,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தேனி மாவட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர்.
பாக்கியுள்ள விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் கூட்டுறவுத்துறை மூலம் மஞ்சள் கொள் முதல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை கொள்முதல் செய்வதற்கு ஆலோசிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்