Tamilnadu
'5 பைசாவுக்கு ஒரு பிளேட் பிரியாணி'.. முண்டியடித்த மக்கள் கூட்டம்.. திறந்த வேகத்திலேயே மூடப்பட்ட ஹோட்டல்!
புதிதாகக் கடை திறப்பவர்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதிலும் உணவகம் திறப்பவர்கள் விதவிதமான அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள்.
அந்த வகையில், மதுரையில் 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிளேட் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்போடு புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டது.
மதுரை செல்லூர் ரோட்டில்தான் இந்த இந்த அசைவ ஹோட்டல் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவையொட்டி 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டனர். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் அந்த பகுதி முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்தை அடுத்து, 11 மணி முதலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் 5 பைசாவுடன் பிரியாணி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தபடியே 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கியது. ஒருகட்டத்தில் பிரியாணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆர்வ மிகுதியில் முண்டியடித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னே சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலிஸார் வந்தும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் 5 பைசாவுக்குப் பிரியாணி வழங்கும் சலுகை முடிந்துவிட்டது என கூறி ஹோட்டல் நிர்வாகம் கடையை மூடியது. இருப்பினும் ஆர்வமுடன் பிரியாணி வாங்க வந்தவர்கள் 5 பைசாவுடன் ஏமாற்றத்துடன் அங்கேயே சிறிதுநேரம் நின்றிருந்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!