Tamilnadu
காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல்; அதிர்ச்சியில் தாய்; கைதான வளர்ப்பு தந்தை!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த பெண்ணுடன் அவரது இரண்டு மகள்களும் வசித்து வருகிறார்கள்.
இதையடுத்து அவருக்கு கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வளர்ப்பு மகள்கள் இருவருக்கும் கணேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என கூறி இரண்டு மகள்களின் உடலிலும் சூடு வைத்து மிரட்டியுள்ளார்.
இது பற்றி அறிந்த மகளின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!