Tamilnadu
சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !
மதுரை அண்ணாநகர் 3வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் சாரதி டெக்ஸ்டைல்ஸ் என்னும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு காலை கடையை திறக்க வரும்போது கடையின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 150 பட்டு சேலைகள், 68 நைட்டிகள், 42 இன்ஞ் 107 சட்டைகள், 38 இன்ஞ் ஜீன்ஸ் பேண்ட்கள், துண்டுகள், 95 சைஸ் பனியன்கள், உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடு போன துணி வகைகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கோபிநாத் மதுரை அண்ணாநகர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!