Tamilnadu
சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !
மதுரை அண்ணாநகர் 3வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் சாரதி டெக்ஸ்டைல்ஸ் என்னும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு காலை கடையை திறக்க வரும்போது கடையின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 150 பட்டு சேலைகள், 68 நைட்டிகள், 42 இன்ஞ் 107 சட்டைகள், 38 இன்ஞ் ஜீன்ஸ் பேண்ட்கள், துண்டுகள், 95 சைஸ் பனியன்கள், உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடு போன துணி வகைகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கோபிநாத் மதுரை அண்ணாநகர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!