Tamilnadu
சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !
மதுரை அண்ணாநகர் 3வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் சாரதி டெக்ஸ்டைல்ஸ் என்னும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு காலை கடையை திறக்க வரும்போது கடையின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 150 பட்டு சேலைகள், 68 நைட்டிகள், 42 இன்ஞ் 107 சட்டைகள், 38 இன்ஞ் ஜீன்ஸ் பேண்ட்கள், துண்டுகள், 95 சைஸ் பனியன்கள், உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடு போன துணி வகைகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கோபிநாத் மதுரை அண்ணாநகர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!