Tamilnadu
"பா.ஜ.க அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,000 கோடி இழப்பு": சபாநாயகர் அப்பாவு தகவல்!
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்கடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "தமிழ்நாட்டில் 2 கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு, 37 ஆயிரத்து 723 நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஒன்றிய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால், தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறைக்கு புதிதாக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு நியாயவிலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !