Tamilnadu
“‘க்ளீன் சென்னை’.. 2 நாளில் 12 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்” : பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை!
சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலையின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் உள்ள அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது என மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஜூலை 8ம் தேதி அதற்கானப் பணிகளை துவக்கியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் சுவரொட்டிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், 1913 என்ற எண்ணையும் மாநகராட்சி அறிமுகம் செய்து இந்த எண்ணில் அழைத்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுவரொட்டிகளை அகற்றப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Also Read
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!