Tamilnadu
திமுக உறுப்பினர் என நினைத்து திருவள்ளுவரை தொடர்ந்து புறக்கணித்த அதிமுக - அமைச்சர் எ.வ.வேலு சாடல்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து சீரமைப்பது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உட்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவாரூர் தேர், பொது அரங்கம், மேல்தளம் உட்பட முழுவதையும் சுற்றி ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி சீர் கெட்டுள்ளதால், அதனை நேரடியாக ஆய்வு செய்து சீரமைக்குமாறு முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார். தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளுவர்கோட்டம். தமிழரின் அடையாளமும் வள்ளுவர் தான். வள்ளுவரின் திருக்குறளை கூட உலக பொதுமறை என்று தான் கூறுகிறோம்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், சுமார் 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பராமரிக்காமல், சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டினார். அதிமுகவிற்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து புறக்கணித்தனர், சமர்சீர் பாட புத்தகத்தில் இருந்தும் வள்ளுவர் படத்தை நீக்கினர் என அமைச்சர் வேலு சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவர் கோட்ட அரங்கத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது, மின்பழுதுகள் சரிசெய்து வண்ணம் பூசி, நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இவற்றையெல்லாம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஆதாரம் திட்டமிட்டு விரைவில் வள்ளுவர்கோட்டம் புனரமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!