Tamilnadu
“மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது”: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, இந்தியா, பாரதம் என்ற வார்த்தைகளே அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இது குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை என்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அவர் அமர்வு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களும் எவ்வாறு அழைப்பது, இவ்வாறு தான் பேசவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
மேலும், மனுதாரர் எதனை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
Also Read
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!