Tamilnadu
ஊரடங்கை மீறி கடையைத் திறக்கச் சொல்லி அராஜகம்: போலிஸாரை கண்டதும் காரில் ஏறிச் சென்ற சேலம் அதிமுக எம்எல்ஏ!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக இருக்கும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், கடையில் பொருட்களை வாங்க வேண்டும் என கூறி, சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் கடையைத் திறக்கச் செய்து, பொருட்களை வாங்கியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் கடை திறந்திருந்ததைப் பார்த்து, கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியபோது, அ.தி.மு.க எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு பாலசுப்பிரமணியமும் அவரது மனைவியும் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர். அரசு உத்தரவை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையைத் திறக்கச் சொன்ன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!