Tamilnadu
“ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சுங்கசாவடிகள் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 108.13 ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் சந்திப்பில் நடைபெற்று வரும் U வடிவ பாலம், இந்திரா நகர் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் நடைமேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டு வரும் கூடுதல் பாலம் ஆகியவற்றின் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர், பெருங்குடி சுங்கச்சாவடி, மற்றும் கலைஞர் சாலையில் உள்ள சுங்கசாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக பெருங்குடி சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள 4 சுங்க சாவடிகளின் வருமானம் தொடர்பாக , பணியாளர்களுக்கான மாத ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் " என தெரிவித்தார்.
மேலும், "சென்னை மாநகராட்சி பகுதிகுட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம், இ.சி.ஆர் சந்திப்பு, மேடவாக்கம் என இந்த பகுதியில் சாலைகளின் மதிப்பீடுகளை ஈடு செய்ய சுங்கசாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்காவடிகளை அகற்ற தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
4 சுங்கசாவடிகளும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ளது. 4 சுங்கசாவடிகளையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இதன் வருமானம் மற்றும் பராமரிப்பு செலவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள 4 சுங்கசாவடிகள் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
தமிழக முதலமைச்சர் எந்த பணிகளை எடுத்தாலும் அதில் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறார். தொடர் நடவடிக்கைகள் உள்ள காரணத்தால் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி இந்த பகுதியில் பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!