Tamilnadu
3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 1.5 கோடி மதிப்பில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் எல்&டி மூலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொரோனா முதல் அலையில் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகளே போதுமானதாக இருந்தது. இரண்டாவது அலையில் அனைவருக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்பட்ட சூழலில் 70 ஆயிரம் புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முதல்வர் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுக்கைகள் மருத்துவமனைகளில் நிரந்தரமாக இருக்கும்.
3 வது அலையில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவது உறுதிபடுத்தப்படாத செய்தி என்றாலும் அனைத்து அரசு பொது மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளும் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கரும்புஞ்சை அறிகுறி தெரிந்த உடனே நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும். இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கரும்புஞ்சை நோய்க்கு 45 ஆயிரம் மருந்துகள் வேண்டும் இதுவரை 11 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது. இதில் 4 ஆயிரம் மருந்துகள் கையிறுப்பில் உள்ளது.
Also Read
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!