Tamilnadu
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்.. தமிழில் அர்ச்சனை: அரசின் அறிவிப்புக்கு ஆர்.நல்லகண்ணு பாராட்டு!
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகையை சிறப்பான நிலைபாடுகளையும் அறிவிப்புகளையும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு வரவேற்கிறது.
பகுத்தறிவுக்கும் சமூக அறிவியலுக்கும் புறம்பானவற்றை தனது வாழ்வின் நிறைவு காலம் வரை சமரசமின்றி எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து குறிப்பிட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்காத சமூக அநீதிகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர்.
தமிழ்நாட்டில் பெரியார் வழி நின்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கலைஞர் கொண்டு வந்த சட்டங்களுக்கு ஏராளமான மேலாதிக்க இடர்கள். தற்போது கலைஞர் வழி நின்று இந்து அற நிலையத்துறை அமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவித் திருப்பதும், தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதும் மிகுந்த பாராட்டுதற்குரியது” இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!
-
“கரூர் துயரத்தில் பொய்த் தகவல்களை கூறும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!