Tamilnadu
உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய காவலர்கள்.. மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டு!
திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா. இவரது ஒன்றரை வயது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகி நின்றுள்ளது.
திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ கார் எதுவும் இல்லாத நிலையில், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு சாலையோரம் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலிஸார் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது அந்த மருத்துவர் சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனும் போலிஸாரை பாராட்டியுள்ளனர். மேலும் காவலர்களின் மனித நேய செயலுக்கு அப்பகுதி மக்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !