Tamilnadu
“முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை” : வனவிலங்குகளை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!
உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மனிதர்களை மட்டும் விட்டு வைக்காமல், தற்போது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், அண்மையில் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் 28 வளர்ப்பு யானைகளுக்கு, இன்று காலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர், வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
குறிப்பாக தெப்பக்காடு முகாமில் உள்ள இரண்டு வயது குட்டியான ரகு முதல் 60 வயதை கடந்த மக்னா யானை மூர்த்தி வரை தும்பிக்கை மற்றும் ஆசனவாயல் ஆகிய இரண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது எடுக்கப்பட்டகொரோனா பரிசோதனை மாதிரிகள் , உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!