Tamilnadu
“விரைவில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி களை தனியார் நிறுவனங்கள் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றும் வேகமாகக் குறைந்து வருகிறது.
முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் தொற்று சரிவு ஏற்பட்டுள்ளது. தொற்று குறைந்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25,134 படுக்கைகள் காலியாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை மிக விரைவில் உருவாகம். அதேபோல் கொரானா தடுப்பூசிகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்" என்றார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!