Tamilnadu
“விரைவில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி களை தனியார் நிறுவனங்கள் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றும் வேகமாகக் குறைந்து வருகிறது.
முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் தொற்று சரிவு ஏற்பட்டுள்ளது. தொற்று குறைந்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25,134 படுக்கைகள் காலியாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை மிக விரைவில் உருவாகம். அதேபோல் கொரானா தடுப்பூசிகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்" என்றார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!