Tamilnadu

ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்காக 6 மணி நேரத்தில் ரூ.20 லட்சம் நிதி திரட்டி அசத்திய YouTubers!

தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த YouTubersகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து 'We For o2' பிரம்மாண்ட தொடர் நேரலை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், செந்தில்வேல், ஆவுடையப்பன், ஆசிப், மதன் கௌரி மற்றும் PlipPlip, Black Sheep, nakkalites, Aransei, U Turn , Nee Yaaruda Komali, Hello Tamizha உள்ளிட்ட YouTube சேனல்களின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி மூலமாக மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.20 லட்சம் நிதியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

YouTubers-களின் இந்த மக்கள் சேவைக்குப் பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சி பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

Also Read: “அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முதல்வரின் கோவை பயணத்திற்கு முத்தரசன் வரவேற்பு!